» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் பிரம்மாண்ட நுழைவாயில்: பக்தர்களைக் கவர்ந்த புதிய முகப்புத் தோற்றம்!
சனி 25, ஜூலை 2026 7:35:24 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான புதிய நுழைவாயில், கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம் இணைந்து ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகளைத் தொடங்கின.
இப்பணிகளை அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தற்போது வரை சுமார் 90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக, கோயிலின் வடக்குப் பகுதி, சந்நிதித் தெரு வழி மற்றும் நாழிக்கிணறு செல்லும் பாதைகளில் எழில்மிகு வண்ணமயமான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கோயில் முகப்பிலும் புதிய நுழைவாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலின் புதிய முகப்புத் தோற்றம் மற்றும் கலைநயத்தை ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் பெரிதும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஜூலை 2026 10:51:20 AM (IST)

உப்பு நிறுவன கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி - தூத்துக்குடி அருகே சோகம்!
சனி 25, ஜூலை 2026 10:45:32 AM (IST)

தூத்துக்குடி ஏர்போர்ட் அருகே ரூ.100 கோடி அரசு தரிசு நிலம் ஆக்கிரமிப்பு: நீதிபதியிடம் மனு அளிக்கப் பொதுமக்கள் முடிவு!
சனி 25, ஜூலை 2026 8:39:53 AM (IST)

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 8:31:34 AM (IST)


