» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் பிரம்மாண்ட நுழைவாயில்: பக்தர்களைக் கவர்ந்த புதிய முகப்புத் தோற்றம்!

சனி 25, ஜூலை 2026 7:35:24 AM (IST)

tiruchendurArch.jpg

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான புதிய நுழைவாயில், கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம் இணைந்து ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகளைத் தொடங்கின.

இப்பணிகளை அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தற்போது வரை சுமார் 90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக, கோயிலின் வடக்குப் பகுதி, சந்நிதித் தெரு வழி மற்றும் நாழிக்கிணறு செல்லும் பாதைகளில் எழில்மிகு வண்ணமயமான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கோயில் முகப்பிலும் புதிய நுழைவாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலின் புதிய முகப்புத் தோற்றம் மற்றும் கலைநயத்தை ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் பெரிதும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory