» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உப்பு நிறுவன கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி - தூத்துக்குடி அருகே சோகம்!
சனி 25, ஜூலை 2026 10:45:32 AM (IST)
தூத்துக்குடி அருகே உப்பு நிறுவனத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை திரவிய லிங்கேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனம் மகன் அழகேந்திரன் (34). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கோவங்காடு அருகே உள்ள பழையகாயலைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான உப்பு நிறுவனத்தில், கடந்த திங்கட்கிழமை முதல் தனது 5 நண்பர்களுடன் தங்கி ஆஸ்பெஸ்டாஸ் கூரை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அழகேந்திரன் கம்பி வழியே மேலே ஏற முயன்றபோது எதிர்பாராத விதமாகச் கால்தவறி சுமார் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, உடனிருந்தவர்கள் மீட்டுத் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஜூலை 2026 10:51:20 AM (IST)

தூத்துக்குடி ஏர்போர்ட் அருகே ரூ.100 கோடி அரசு தரிசு நிலம் ஆக்கிரமிப்பு: நீதிபதியிடம் மனு அளிக்கப் பொதுமக்கள் முடிவு!
சனி 25, ஜூலை 2026 8:39:53 AM (IST)

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 8:31:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பிரம்மாண்ட நுழைவாயில்: பக்தர்களைக் கவர்ந்த புதிய முகப்புத் தோற்றம்!
சனி 25, ஜூலை 2026 7:35:24 AM (IST)


