» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எல் நினோ தாக்கம் - பாதிப்புகளைக் கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 4:25:41 PM (IST)

தமிழ்நாட்டில் எல் நினோ வானிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்கும், கண்காணித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கும் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிப்பதால் உருவாகும் எல் நினோ தாக்கத்தால் உலகளவில் வறட்சி மற்றும் பெருமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் என உலக வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதன் காரணமாகத் தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்புள்ள நிலையிலேயே இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் முருகானந்தம் தலைவராகச் செயல்படுவார்.
குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய நிபுணர்கள்:
எஸ். கண்மணி (தலைவர், காலநிலை மாற்றத்துறை, அண்ணா பல்கலைக்கழகம்)
பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்)
மற்றும் காலநிலை, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மைத் துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட 7 பேர்.
குழுவின் முக்கியப் பணிகள்:
கண்காணிப்பு & எச்சரிக்கை: மழை அளவு, வறட்சி நிலவரம் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுக்குத் தேவையான பரிந்துரைகளை இக்குழு வழங்கும்.
பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறிதல்: வெயில் மற்றும் வறட்சியால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து முன்எச்சரிக்கை தகவல்களை அளிக்கும்.
பேரிடர் மேலாண்மை ஆலோசனைகள்: தீவிர வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும், விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் தேவையான உடனடி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2026-27 கல்வியாண்டு பள்ளி நாட்காட்டி வெளியீடு: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!
வியாழன் 30, ஜூலை 2026 3:55:20 PM (IST)

தூங்கிக் கொண்டிருப்பது யார்? - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
வியாழன் 30, ஜூலை 2026 3:45:30 PM (IST)

கரூர் அரசுப்பணி உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
வியாழன் 30, ஜூலை 2026 12:44:40 PM (IST)

சென்னை மெட்ரோ ரயில் பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 12:16:19 PM (IST)

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வியாழன் 30, ஜூலை 2026 12:00:03 PM (IST)

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!
வியாழன் 30, ஜூலை 2026 10:12:24 AM (IST)


