» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வகுப்பறையில் வலிப்பு ஏற்பட்டுப் பள்ளி மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்!

வியாழன் 30, ஜூலை 2026 9:36:54 PM (IST)

தூத்துக்குடியில் பள்ளி வகுப்பறையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி செல்சீனி காலனி 4-வது தெருவைச் சேர்ந்த குருஸ் ராஜா என்பவரது மகன் கார்த்திகேயன் (13). காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இந்த சிறுவன், பிரையண்ட் நகர் 3-வது தெருவில் உள்ள செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுவயது முதலே வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வந்த கார்த்திகேயனுக்கு, இன்று காலை பள்ளி வகுப்பறையில் இருந்தபோது சுமார் 10 மணி அளவில் திடீரெனக் கடுமையான வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக மாணவனின் தாயார் குத்தாலம்மாளுக்குத் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த தாயாரும் பள்ளி ஊழியர்களும் சேர்ந்து, கார்த்திகேயனை ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory