» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாமா? நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்!

புதன் 12, ஆகஸ்ட் 2026 8:04:01 AM (IST)

tollplaza.jpg

சுங்கச்சாவடிகளின் அருகே வசிப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

நாடெங்கிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டுக் கட்டணமின்றி வாகனங்களை இயக்கலாம் என்ற தகவல் பரவியது.

சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளூர் வாசிகள் முற்றிலும் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்பது தவறான தகவலாகும். சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்குக் கட்டணச் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதற்காக 'உள்ளூர் மாதாந்திர பாஸ்' (Local Monthly Pass) முறை நடைமுறையில் உள்ளது.

குறிப்பிட்ட அந்தச் சுங்கச்சாவடிக்கு உரிய விதிகளின்படி முறைப்படி விண்ணப்பித்து இந்த மாதாந்திர பாஸைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, வெறுமனே அடையாள அட்டையைக் காட்டி இலவசமாகச் செல்ல முடியாது என்றும், சலுகையைப் பெற விரும்புவோர் அந்தந்தச் சுங்கச்சாவடியின் விதிமுறைகளைப் பின்பற்றி மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory