» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்திப்பு

வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:12:07 AM (IST)

RBICmvijay.jpg

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கடமைச் சந்திப்பில், மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் வங்கித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இச்சந்திப்பின் போது அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முக்கிய உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர், தலைமைப் பொது மேலாளர் யாராசி ஜெயக்குமார் மற்றும் பல துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory