» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கனிமவள உரிமத் தொகையை வசூலிக்கலாம்: மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அனுமதி!
புதன் 14, ஆகஸ்ட் 2024 12:56:09 PM (IST)
கனிமவள உரிமத் தொகையை மத்திய அரசிடம் இருந்து வசூலிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
2005 முதல் மத்திய அரசு, குத்தகைதாரர்கள் வசூலித்த தொகையை மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில், தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பும், ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பும் வழங்கினார்.
அடுத்த 12 ஆண்டுகளுக்கு தவணை முறையில் நிலுவைத் தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கனிமவள நிலம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே, கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உரிமத் தொகை வசூலித்துக்கொள்ள இன்று அனுமதி வழங்கியிருக்கிறது.கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)
