» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பொதுமக்கள் அதிர்ச்சி!
வெள்ளி 8, நவம்பர் 2024 5:24:32 PM (IST)

கர்நாடகாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்கராபேட்டை நகரில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வெளிப்புறச் சுவர் சேதமடைந்தது. வீட்டில் இருந்த 3 பேரை தீயணைப்புத் துறையினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:58:15 PM (IST)

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை : தேர்தல் ஆணையம் மறுப்பு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:49:23 PM (IST)

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)
