» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பொதுமக்கள் அதிர்ச்சி!
வெள்ளி 8, நவம்பர் 2024 5:24:32 PM (IST)

கர்நாடகாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்கராபேட்டை நகரில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வெளிப்புறச் சுவர் சேதமடைந்தது. வீட்டில் இருந்த 3 பேரை தீயணைப்புத் துறையினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவோம்: பிரதமர் மோடி ஆவேசம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:27:44 PM (IST)

பஹல்காம் தாக்குதல் : உளவுத்துறை தோல்விகள் குறித்து ஆய்வு நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:33:36 PM (IST)

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்?
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:42:42 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:03:16 PM (IST)

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்கா விலகிவிடும்
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:56:08 AM (IST)

அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!
புதன் 23, ஏப்ரல் 2025 5:38:19 PM (IST)
