» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது: பிரதமர் மோடி
சனி 9, நவம்பர் 2024 10:34:43 AM (IST)
ஜம்மு-காஷ்மீரில் எந்த சக்தியாலும் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என்று பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாடு கட்சி, சட்டமன்றத்தில் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் சதியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: மகாராஷ்டிரா (மகாராஷ்டிரா மாநில மக்கள்) ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் செய்த சதிகளை புரிந்து கொள்ள வேண்டும். நாடு சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது. மோடி இங்கு இருக்கும் வரை, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியால் ஏதும் செய்ய இயலாது. அம்பேக்தரின் அரசியலமைப்பு மட்டுமே அங்கு செயல்படும். சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலும், "காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கான திட்டத்தை (agenda) இங்கு முன்வைக்க வேண்டாம். காஷ்மீருக்காக பிரிவினைவாத மொழிகளை பேச வேண்டாம்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)

அரியானா வாக்காளர் பட்டியலில் புகைப்படம் : பிரேசில் மாடல் அழகி அதிர்ச்சி!
வியாழன் 6, நவம்பர் 2025 11:25:12 AM (IST)

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் பலி!
வியாழன் 6, நவம்பர் 2025 8:38:12 AM (IST)

தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!
புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)




