» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முல்லைப்பெரியாறு அணை வழக்கில் தேசிய அளவில் நிபுணர் குழு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!
புதன் 8, ஜனவரி 2025 5:28:27 PM (IST)
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நிபுணர் குழுவை இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தேசிய அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழு அமைப்பதில் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும், நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜனவரி 22ல் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:52:58 PM (IST)

சுங்கச்சாவடிகளில் புதிய விதிமுறை: ரொக்கப் பரிவர்த்தனைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:08:58 PM (IST)

பாகிஸ்தான் மிரட்டலுக்கு பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? – மம்தா பானர்ஜி காட்டம்
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:56:30 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் பதவியேற்பு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:19:08 PM (IST)

இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமான சேவை மே 31 வரை ரத்து: போர்ப் பதற்றத்தால் அதிரடி முடிவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:29:30 AM (IST)

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை: கொடூர தந்தை கைது!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:27:48 PM (IST)

