» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முல்லைப்பெரியாறு அணை வழக்கில் தேசிய அளவில் நிபுணர் குழு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!
புதன் 8, ஜனவரி 2025 5:28:27 PM (IST)
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நிபுணர் குழுவை இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தேசிய அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழு அமைப்பதில் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும், நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜனவரி 22ல் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
