» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முல்லைப்பெரியாறு அணை வழக்கில் தேசிய அளவில் நிபுணர் குழு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!
புதன் 8, ஜனவரி 2025 5:28:27 PM (IST)
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நிபுணர் குழுவை இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தேசிய அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழு அமைப்பதில் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும், நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜனவரி 22ல் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)

அரியானா வாக்காளர் பட்டியலில் புகைப்படம் : பிரேசில் மாடல் அழகி அதிர்ச்சி!
வியாழன் 6, நவம்பர் 2025 11:25:12 AM (IST)

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் பலி!
வியாழன் 6, நவம்பர் 2025 8:38:12 AM (IST)

தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!
புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு: மம்தா தலைமையில் பேரணி!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:43:30 PM (IST)

பொங்கல் பண்டிகைதோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:01:41 PM (IST)




