» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடி வரிப்பகிர்வு - மத்திய அரசு விடுவிப்பு
வெள்ளி 10, ஜனவரி 2025 5:17:21 PM (IST)
தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடியை வரிப்பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது.
நாட்டில் வசூலாகும் வரி தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி 2025 ஜனவரி மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.31,039 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு ரூ.17,403 கோடியும், மத்தியபிரதேசத்திற்கு ரூ.13,588 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரபிரதேசத்துக்கு ரூ.7,002.52 கோடி, அருணாச்சலபிரதேசத்துக்கு ரூ.3,040.14 கோடி, அசாமுக்கு ரூ. 5,412.38 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சத்தீஸ்கருக்கு ரூ.5,895.13 கோடி, குஜராத்துக்கு ரூ.6,017.99 கோடி, அரியானாவுக்கு ரூ.1,891.22 கோடி, இமாச்சலபிரதேசத்துக்கு ரூ.1,436.16 கோடி, ஜார்க்கண்ட்டுக்கு ரூ.5,722.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு ரூ. 6,310.40 கோடி, கேரளாவுக்கு ரூ.3,330.83 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,637.09 கோடி, உத்தராகண்ட்டுக்கு ரூ.1,934.47 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13,017.06 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)




