» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இரும்புக்கம்பி ஏற்றிச்சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்து: 8 பேர் பரிதாப சாவு!
திங்கள் 13, ஜனவரி 2025 8:46:55 AM (IST)
நாசிக்கில் இரும்புக்கம்பி ஏற்றிச்சென்ற லாரி மீது டெம்போ மோதிய கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் வர்கா நகரில் நேற்று இரும்புக்கம்பி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல், நிப்ஹட் நகரில் இருந்து 16 பேருடன் சிட்கோ தொழிற்பேட்டைக்கு டெம்போ ஒன்றும் சென்றுகொண்டிருந்தது. வர்கா நகர் அருகே அய்யப்பன் கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ எதிரே இரும்புக்கம்பி ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த கோர விபத்தில் டெம்போவில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)

வெற்றிகரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா : பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:35:58 PM (IST)

பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:22:02 PM (IST)

காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 10:18:29 AM (IST)

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)
