» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திரப் பிரதேசம் முழுவதும் வெப்ப அலை வீசும் : பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:13:38 PM (IST)
ஆந்திரப் பிரதேசம் முழுவதும் இன்று வெப்ப அலை வீசும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்திவரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று 26 மண்டலங்களில் வெப்பம் கொளுத்தும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
26 மண்டலங்களில் விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவற்டடங்களில் தலா ஆறு மண்டலங்களும், அல்லூரி சீதாராமராஜுவில் 3 மண்டலங்களும், கிழக்கு கோதாவரியில் ஒன்று, பார்வதிபுரம் மன்யத்தில் 10 மண்டலங்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் தெரிவித்தார்.
நந்தியாலா மாவட்டத்தில் கோஸ்பாடுகவில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதைத் தொடர்ந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள கம்மரசேடுவில் 40.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளன. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)
