» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இலங்கையிடம் படகுகளை இழந்த மீனவர்களுக்கு என்ன நிவாரணம்?.. கனிமொழி எம்.பி. கேள்வி
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:14:12 PM (IST)
இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 200 படகுகள் நாட்டுடைமையாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குமா? என கனிமொழி எம்.பி. எழுப்பினார்.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு எம்.பி.; தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அதிபர் கூறினார், ஆனால் உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் அவர்களது உடைமைகளை இலங்கை அரசு பறிமுதல் செய்கிறது எனக் குறிப்பிட்டார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் லோக்சபாவில் இருந்து தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)
