» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தானிற்கு நிதி வழங்குவதில் ஆழமான யோசனை தேவை : ஐஎம்எஃப்-க்கு இந்தியா வலியுறுத்தல்!

வெள்ளி 9, மே 2025 3:36:32 PM (IST)

தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன் ஆழமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். 

பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடனை வழங்குவது குறித்து ஐஎம்எஃப் அமைப்பு இன்று மதிப்பாய்வு செய்ய உள்ள நிலையில், இதனை இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்காக வழங்கப்பட்ட நிதி எதற்காக பெறப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்பட்டதா,அல்லது வேறு எதற்காகவும் பயன்படுத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் ஐஎம்எஃப் அமைப்புக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனர், இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைப்பார் என்றும் தெரிவித்தார். இதனிடையே இந்தியாவின் தாக்குதலால் கடும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும் எனவே நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் வழங்க வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. 

ஆனால், உலக வங்கி, ஆசிய வங்கி, சர்வதேச நிதியம் மூலம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு கிடைக்கும் கடனை தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாடு, கடனுதவி கிடைக்காவிடில் கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory