» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலி : இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு!

செவ்வாய் 18, நவம்பர் 2025 3:52:54 PM (IST)

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலியாக மருத்துவர் பரிந்துரை இன்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது என்ற புதிய கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்பட இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் நச்சுப்பொருட்கள் அதிகளவில் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மருந்தை தயாரித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது. 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்கள் சில இருமல் மருந்துகளை தடை செய்துள்ளன.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு மருத்துவ எச்சரிக்கையை வெளியிட்டது. இது போன்ற இருமல் மருந்துகளின் விநியோகத்தை முறையாக கண்காணிக்காமல் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். என தெரிவித்தது.

இந்நிலையில், மருத்துவர் பரிந்துரை இன்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது என்றும், மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் எனவும் புதிய கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது உள்ள விதிகளின்படி மருந்து விநியோகிப்பதற்கான உரிமம் இன்றி இருமல் மருந்தை விற்பனை செய்ய முடியும். வரவிருக்கும் புதிய கட்டுப்பாடுகளின்படி, மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory