» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் கடுமையான நோய்களால் அவதிப்பட்டு வரும் தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவில் தெரு நாய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறுவர்கள், முதியோர்கள் என அனைவரும் தெரு நாய்களின் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஆபத்தான தெரு நாய்களைக் கொல்லலாம் எனச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரள அரசின் முக்கிய வழிகாட்டுதல்கள்:
இதற்கான புதிய வழிகாட்டுதல்களைக் கேரள உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது: சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாத, கடுமையாகக் காயமடைந்த, வெறிநாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட (வெறிநோய்க்கான அறிகுறிகள் கொண்ட) அல்லது காரணமின்றி மனிதர்களையும் பிற விலங்குகளையும் தாக்கும் ஆபத்தான நாய்களை மட்டுமே கருணைக்கொலை செய்ய வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனிக் குழு அமைக்கப்பட வேண்டும். தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த மருந்தை நரம்பு வழியாகச் செலுத்தி மட்டுமே கருணைக்கொலை செய்ய வேண்டும். விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது.
பிடிபடும் நாய்களை 2 முதல் 3 நாட்கள் மறுவாழ்வு மையம் அல்லது தங்கும் இடத்தில் பராமரிக்க வேண்டும். அந்த நேரத்தில் தனிநபர்களோ அல்லது விலங்குகள் நல அமைப்புகளோ தத்தெடுக்க முன்வந்தால் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
மற்ற நாய்களின் முன்னிலையில் கருணைக்கொலை செய்யக் கூடாது. கருணைக்கொலை செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டியது கால்நடை மருத்துவரின் பொறுப்பாகும்.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தங்களது அதிகாரப்பூர்வ கடமையை நேர்மையாக நிறைவேற்றும் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகச் செயல்பட்டால் இந்த பாதுகாப்பு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறப்பதில் என்ன பிரச்சனை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:59:02 AM (IST)

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)


