» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 11:46:06 AM (IST)
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து, அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது.
இந்த நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை பாதிக்கிறது என்றும், இது மோசமாக முடிவைடையும் என்றும் போப் ஆண்டவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதிரியார்களுக்கு எழுதிய கடிதத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
போர், வறுமை மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து தப்பிச்செல்பவர்களை, பிற நாடுகள் வரவேற்று, பாதுகாக்க வேண்டும் என்று போப் ஆண்டவர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார். அரசாங்கங்கள் தங்கள் திறன் வரம்பிற்கு ஏற்றவாறு இதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்
திங்கள் 24, மார்ச் 2025 5:26:06 PM (IST)

கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 10:07:56 AM (IST)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்; 44 பேர் பலி
ஞாயிறு 23, மார்ச் 2025 9:53:19 AM (IST)

நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரிக்கை: அமெரிக்க நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீடு!
சனி 22, மார்ச் 2025 5:38:27 PM (IST)

அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்!
சனி 22, மார்ச் 2025 11:00:16 AM (IST)

அமெரிக்க அரசின் கல்வித்துறை கலைப்பு: அதிபர் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி!
வெள்ளி 21, மார்ச் 2025 11:15:31 AM (IST)
