» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சோவியத் யூனியன் வெற்றி தினம்: 3 நாள்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்தார் ரஷிய அதிபர் புதின்!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:35:33 AM (IST)

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர்புதின் அறிவித்துள்ளார். 

உக்ரைனில் நிரந்தர போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ரஷியாவையும் உக்ரைனையும் அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திவரும் சூழலில் இந்த மூன்று நாள் போர்நிறுத்தத்தை புதின் ஒருதலைபடசமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ரஷிய அதிபர்மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1945-ஆம் ஆண்டில் நாஜிக்களின் ஜொ்மனியை ரஷியா வெற்றி கொண்டதை முன்னிட்டு மே 8 முதல் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, உக்ரைனில் 72 மணி நேரத்துக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் அறிவிக்கப்படும் இந்தப் போர்நிறுத்தம், மே 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவடைகிறது. உக்ரைனும் இந்த போர்நிறுத்தத்தை பின்பற்றும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் விமா்சனம்: ஏற்கெனவே, டிரம்ப் முன்வைத்துள்ள 30 நாள் போர்நிறுத்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள உக்ரைன், புதினின் இந்த 3 நாள் போர்நிறுத்தம் வெறும் கண்துடைப்பு என்று விமா்சித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர்ஆண்ட்ரி சிபிஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போர்நிறுத்தம் நீடித்திருக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு முன்னதாக, ஈஸ்டர்தினத்தை முன்னிட்டு 30 மணி நேர போர்நிறுத்தத்தக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வதாக உக்ரைனும் அறிவித்தது. இருந்தாலும், போர்நிறுத்தத்தை மீறி தங்கள் மீது தாககுதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

அதே போல், எரிசக்தி மையங்கள் மீது 30 நாள்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று ரஷியாவும், உக்ரைனும் அமெரிக்கா முன்னிலையில் கடந்த மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறியதாக ரஷியா மீது உக்ரைனும், உக்ரைன் மீது ரஷியாவும் அடிக்கடி குற்றஞ்சாட்டின. இந்தச் சூழலில், இரண்டாம் உலகப் போர்வெற்றி விழாவை முன்னிட்டு உக்ரைனில் 3 நாள்களுக்கு போரை நிறுத்திவைப்பதாக தற்போது விளாதிமீர்புதின் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory