» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியாவின் வெற்றி தினவிழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் : மத்திய அரசு அறிவிப்பு
வியாழன் 1, மே 2025 12:27:35 PM (IST)
ரஷியாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ரஷியாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். இதனை ரஷியாவின் அதிபருக்கான செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி ரஷியாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மாஸ்கோவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தி உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போப் போல் ஆடை அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் : சமூக வலைதளத்தில் வைரல்!!
சனி 3, மே 2025 5:31:07 PM (IST)

பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: வெளியுறவுத்துறை அதிகாரி அறிவிப்பு
சனி 3, மே 2025 10:42:58 AM (IST)

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை: டிரம்ப் எச்சரிக்கை
வெள்ளி 2, மே 2025 12:36:51 PM (IST)

பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்
வியாழன் 1, மே 2025 12:09:44 PM (IST)

தமிழகத்திலிருந்து கடத்திய ரூ.9.6 கோடி கஞ்சா பறிமுதல்; 4பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை!
புதன் 30, ஏப்ரல் 2025 11:55:40 AM (IST)

கனடாவில் ஆட்சியை தக்க வைத்த மார்க் கார்னி : பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:54:10 PM (IST)
