» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவின் வெற்றி தினவிழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் : மத்திய அரசு அறிவிப்பு

வியாழன் 1, மே 2025 12:27:35 PM (IST)

ரஷியாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ரஷியாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். இதனை ரஷியாவின் அதிபருக்கான செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி ரஷியாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மாஸ்கோவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தி உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory