» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடை: இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!
புதன் 16, ஜூலை 2025 10:45:54 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், சீனா, இந்தியா மற்றும் பிரேசில் கடும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரித்து உள்ளார்.
இது குறித்து, நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியதாவது: நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியும்.
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும். தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தால் 100% பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள், புடினை அழைத்து தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எனவே தயவுசெய்து புடினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சு வார்த்தைகளில், தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துங்கள். இல்லையெனில் இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். ரஷ்யாவின் எண்ணெய் வாங்குபவர்களில் இந்தியா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க - இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:42:00 PM (IST)

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)

போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் பேச்சு!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:52:40 PM (IST)

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)
