» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் இருந்து சீனா சென்ற எண்ணெய் கப்பல்.. 2021ம் ஆண்டிற்கு பிறகு முதல்முறை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:39:32 PM (IST)
இந்தியாவில் இருந்து 2021ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக எண்ணெய் கப்பல் சீனாவுக்கு சென்றுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக விதித்த தடைகள் காரணமாக இந்திய, ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாயரா நிறுவனத்தின் எண்ணெய் கப்பல்கள் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் இருந்து நயாரா நிறுவன எண்ணெய் கப்பல் சீனா புறப்பட்டது.
மலேசியாவிற்கு செல்ல வேண்டிய கப்பல், பொருளாதார தடைகளால் சீனாவின் சூஷான் துறைமுகத்திற்கு செல்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து 5 லட்சம் பேரல் டீசல் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. லடாக் எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா - சீனா உறவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கு பிறகு இந்திய எண்ணெய் கப்பல் சீனாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க - இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:42:00 PM (IST)

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)

போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் பேச்சு!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:52:40 PM (IST)

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)
