» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!

திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)

FloodBangladesh.jpg

வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் சிட்டகாங்க் மாகாணத்திற்கு உட்பட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள மொத்தம் 64 மாவட்டங்களில், சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்கள் தற்போது வெள்ளநீரால் சூழப்பட்டுப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு:

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாகப் பலி விபரம்:

காக்ஸ் பஜார் மாவட்டம்: 28 பேர் பலி.

சட்டோகிராம் பகுதி: 13 பேர் பலி.

பந்தர்பன் பகுதி: 6 பேர் பலி.

பலியானவர்களில் பெரும்பாலோர் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ரோகிங்கியா முஸ்லிம்கள் ஆவர். மேலும், சிட்டகாங்க் மாகாணத்தில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory