» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஓலா, ஊபர் டாக்சிக்கு தடை விதிக்க கோரி ஆர்ப்பாட்டம் - ஆட்டோ டிரைவர்கள் முடிவு!
புதன் 31, ஜூலை 2024 4:10:47 PM (IST)

ஓலா, ஊபர் போன்ற தனியார் டாக்சிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆக.13ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர் மீது ஆன்லைன் பதிவு செய்யக்கூடிய வழக்கை கைவிட வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் நிதி ஒதுக்குவது போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுவதற்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் ஆக உயர்த்த வேண்டும். ஆட்டோ எப்சி கட்டணம் குறைக்க வேண்டும். பெண்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு லட்ச ரூபாய் மானியத்தை ஆண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வணங்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்கள் விபத்து மரணம் ஏற்பட்ட ஐந்து லட்சம் நிதி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய ஆட்டோ ஓட்டு உரிமை (பேட்ஜ்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளின் பள்ளி உயர்கல்வி மேற்படிப்புக்கு நிதி உதவி உயர்த்தி தர வேண்டும். எப்சி பெர்மிட் கட்டணத்தை குறைத்திட வேண்டும்.
ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்களை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆக.13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கோரி சங்கத்தின் சார்பாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மாரியப்பன், மணிவண்ணன், திருப்பதி வெங்கடேஷ், சக்திவேல், சுரேஷ், மந்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)



ஆனந்த்Jul 31, 2024 - 04:48:03 PM | Posted IP 172.7*****