» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இன்னோவேஷன் மராத்தான்: தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:47:57 PM (IST)

இன்னோவேஷன் மராத்தான் போட்டியில் தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் 15-ம் இடமும் மாநிலத்தில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ATL இன்னோவேஷன் மராத்தான் 2021-22ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் "உதிரம் எடுக்காமலேயே நம் உடலின் இரத்த சோகை அளவினைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் கருவி" கண்டுபிடிப்பிற்காக தேசிய அளவில் 15-ம் இடமும் நம் மாநிலத்தில் முதல் இடமும் பெற்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் முதலிடம் பெற்ற பள்ளி மாணவ / மாணவியர்கள் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவினை நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியின் ATL Innovators மாணவர்களின் திறமையைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக 78வது சுதந்திர தின விழாவைச் செங்கோட்டையில் நேரில் காண்பதற்கான அதிகாரப்பூர்வக் கடிதம் கிடைக்கப் பெற்றது.
அதில் மாணவிகள் சுபிட்சா, பிரார்த்தனா, பொறுப்பாசிரியை ஜித்தாமோல் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் லெ.பாபு ராதாகிருஷ்ணன் அனைவரும் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டனர். மேலும் அவர்களுக்கு 78வது சுதந்திர தின விழாவினையும், பாரதப் பிரதமரின் உரையையும் நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக இம்மாணவர்களை பள்ளித் தலைவர் பாலு, பள்ளிச் செயலர் டி.எஸ். பிரேம்சுந்தர், தலைமையாசிரியர் லெ.பாபு ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வாழ்த்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

Navaladi KarthikeyanAug 13, 2024 - 04:24:56 PM | Posted IP 162.1*****