» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:07:07 AM (IST)

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், சமூக நீதி சமத்துவத்திற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ரமேஷ் முன்னிலை வைத்தார். அரசியல் ஆலோசனை குழு செயலாளர் முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் முருகபூபதி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாநில மீனவர் அணி செயலாளர் தர்மம், நிர்வாகிகள் வீரபாண்டி செல்லச்சாமி, மாவட்ட தலைவர் பேச்சி ராஜா, பொருளாளர் காயல் அமுலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் வீரபாண்டி, சரவணன், மணி, பிஎஸ் முருகன், ஜெயக்கொடி, இக்பால், ராஜ்குமார், நக்கீரன், பொன்ராஜ், மகாராஜா உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

PEOPLESAug 14, 2024 - 03:58:57 PM | Posted IP 172.7*****