» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஐடிஐயில் பயின்று சான்றிதழ் பெறாதவர்கள் டிச.31-க்குள் பெறலாம்
சனி 7, செப்டம்பர் 2024 11:35:09 AM (IST)
ஐடிஐயில் பயின்று இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என பேட்டை ஐடிஐ துணை இயக்குநர் ஆர்.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 1960 முதல் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் தேசிய தொழில் சான்றிதழ்கள் மற்றும் 2013 முதல் 2017 வரை பருவமுறை மதிப்பெண் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் பெறப்படாமல் உள்ளன. எனவே வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஐடிஐக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
 நீண்ட காலமாக இச்சான்றிதழ்கள் உள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படவில்லையெனில் அரசு ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அதற்கு பின்பு சான்றிதழ் வேண்டி வருபவர்கள் அரசு ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் பெறும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)

கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடரும் : நெல்லையில் சீமான் பேட்டி!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:10:51 PM (IST)

நெல்லை மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:21:12 AM (IST)




