» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது பணத்தை திருடிய பெண் போலீஸ் கைது
புதன் 27, நவம்பர் 2024 8:32:40 AM (IST)

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் 20-ந்தேதிக்கு மேல் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, 4 பெண்கள் காணிக்கை பணத்தை நைசாக திருடியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கோவில் நிர்வாகம் சார்பில் அங்குள்ள புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, அங்கிருந்த 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெண் போலீஸ் உள்பட 4 பேர் என்ற பரபரப்பு தகவல் வெளியானது.
அதாவது, சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி (42), முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து உண்டியல் காணிக்கை பணம் ரூ.17,710-ஐ திருடியதும் தெரியவந்தது. மேலும் மகேஷ்வரி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றும் அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதையடுத்து 4 பேரும் சங்கரன்கோவில் டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிந்து மகேஷ்வரி உள்பட 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து இவர்கள் 4 பேரும் சேர்ந்து வேறு எங்கேயும் இதுபோன்று கைவரிசையில் ஈடுபட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கோவிலில் ஏற்கனவே உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது பணம் திருடப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் நடந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை : நெல்லையில் சோகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:27:46 PM (IST)

தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆட்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்
திங்கள் 13, அக்டோபர் 2025 11:10:28 AM (IST)
