» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாலம் பணிகளை நிறுத்த வலியுறுத்தி சாலை மறியல் : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 27, நவம்பர் 2024 12:28:45 PM (IST)

தூத்துக்குடி தெற்கு சோட்டையன்தோப்பு பகுதியில் பாலம் கட்டும் பணிகளை நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ளது சோட்டையன் தோப்பு, ஆரோக்கியபுரம், ஆ.சண்முகபுரம், ஆகிய பகுதிகள் இந்நிலையில் இந்த பகுதிகளை பாதிக்கும் வகையில் தூத்துக்குடி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சொட்டையன் தோப்பு பகுதி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் அமைத்தால் தங்கள் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் கிராமங்களுக்குள் எளிதாக புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவே இந்த பாலத்தை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே மாப்பிளையூரனி பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால் அந்த பாலப்பணியை நிறுத்த நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தூத்துக்குடி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர.
இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் தாளமுத்து நகர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கலைத்தனர். இந்த பாலத்தை கட்டும் பணியை உடனடியாக நிறுத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)


பட்டுராஜன்Nov 27, 2024 - 12:38:06 PM | Posted IP 172.7*****