» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதியவர் கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை : தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வெள்ளி 29, நவம்பர் 2024 8:24:08 AM (IST)
முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சாமுவேல் துரைபாண்டி(70) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேல மெஞ்ஞானபுரம் கோவிந்தராஜ் என்பவரின் மகன் ஏழுமலை (45) என்பவரை குற்றாலம் காவல் துறையினர கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனோஜ் குமார் குற்றவாளி ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த குற்றாலம் காவல்துறை யினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




