» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்: ஆட்சியர் கார்த்திகேயன் அனுப்பி வைத்தார்!
சனி 7, டிசம்பர் 2024 4:43:19 PM (IST)

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.8.52 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (07.12.2024) /பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் வட மாவட்டங்களை புரட்டி எடுத்த பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 5 கிலோ அரசி, சீனி, நயம் துவரம் பருப்பு, ரவை ½ கிலோ, மல்லி பொ, மஞ்சல் பொடி, வத்தபொடி, சாம்பார் பொடி, சீரகம், கடுகு, டீ தூள், பிஸ்கட் பாக்கெட், போர்வை, சேலை, சாரம் என 1068 குடும்பங்களுக்கு ரூ.8.52 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்.
நிவாரணம் வழங்க முன்வரும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஆ.சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)
