» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பு : பயணிகள் வரவேற்பு!
புதன் 15, ஜனவரி 2025 9:05:22 PM (IST)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்று முதல் இணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்றுமுதல் இணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் முதல்முதலாக 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இன்று(ஜன. 15) அதிகாலை மணிக்கு 6.05 புறப்பட்டது. அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு 16 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)





UNMAIJan 16, 2025 - 01:06:28 PM | Posted IP 162.1*****