» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிலாளர்களுக்கு இருக்கை அளிக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!
வியாழன் 16, ஜனவரி 2025 4:00:24 PM (IST)
நெல்லை மாவட்டத்தில், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரத்தில் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகள் ஏற்படுத்தாமல் இருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசால் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகை தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகளிலும் நிறுவனத்தின் பெயர் தேவைப்படும் நேர்வில் தமிழில் முதலிலும், ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், பிறமொழி அதற்கு அடுத்தும் இருக்குமாறும், மேற்படி எழுத்துக்களின் அளவு தமிழ், ஆங்கிலம், பிற மொழி எழுத்துக்கள் 5:3:2 என்ற விகிதாச்சாரத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், 2024-ஆம் ஆண்டில் தொழிலாளர் நலத்துறை வாயிலாக ஆய்வு மேற்கொண்டதில் தமிழில் பெயர்ப்பலகை முறையாக வைக்காத 91 கடைகள் /வணிக நிறுவனங்கள் / உணவு நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, இதுவரை அபராதமாக ரூ.75,500/- விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக சென்று திருநெல்வேலி டவுண், பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பேருந்து நிலையம், வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்தும், பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், முறையாக தமிழில் பெயர்பலகை அமைக்காத 84 நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம் மற்றும் 1958-ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் சட்டத்தின்படி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள் /வணிக நிறுவனங்கள் / உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி: ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:52:43 PM (IST)

பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்: கேரளாவின் சேர்த்தலாவில் கூடுதல் நிறுத்தம்
செவ்வாய் 17, மார்ச் 2026 10:24:55 AM (IST)

கார் தீப்பிடித்து எரிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அச்சம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 10:15:08 AM (IST)

அரசுப் பள்ளி ஆசிரியைக்குச் சரமாரி அரிவாள் வெட்டு : குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:25:54 AM (IST)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)


SRINIVASANJan 17, 2025 - 10:46:32 AM | Posted IP 162.1*****