» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு உயிரிழப்பு : எஸ்பி, காவல்துறையினர் அஞ்சலி!
வெள்ளி 17, ஜனவரி 2025 10:52:05 AM (IST)
தென்காசி அருகே விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு எஸ்பி அரவிந்த் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
தென்காசி ஆபாத் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலி (40). கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய இவர் பின்னர் மாவட்ட போலீஸ் தனிப்படை பிரிவில் வேலை செய்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி இரவில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் செய்யது அலி பலத்த காயமடைந்தார். அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான தென்காசிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால், துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மற்றும் போலீசார், குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் அடக்க தலத்தில், போலீசார் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செய்யது அலி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)
