» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு உயிரிழப்பு : எஸ்பி, காவல்துறையினர் அஞ்சலி!
வெள்ளி 17, ஜனவரி 2025 10:52:05 AM (IST)
தென்காசி அருகே விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு எஸ்பி அரவிந்த் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
தென்காசி ஆபாத் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலி (40). கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய இவர் பின்னர் மாவட்ட போலீஸ் தனிப்படை பிரிவில் வேலை செய்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி இரவில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் செய்யது அலி பலத்த காயமடைந்தார். அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான தென்காசிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால், துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மற்றும் போலீசார், குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் அடக்க தலத்தில், போலீசார் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செய்யது அலி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
