» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய ஆலிவ் ரெட்லி ஆமை : வனத்துறையினர் விசாரணை

ஞாயிறு 23, மார்ச் 2025 9:00:55 AM (IST)



தூத்துக்குடியில் அருகே உள்ள கோவளம் கடற்கரையில் சுமார் 60 கிலோ எடையுள்ள ஆலிவ் ரெட்லி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

தூத்துக்குடி முள்ளக்காடு ஊராட்சிக்குள்பட்ட கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனத்துறையினருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் உத்தரவின்படி, வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆய்வு மேற்கொண்டார். 

இது ஆலிவ் ரெட்லி ரக ஆமை என்பதும், இது மீனவர்களின் வலைகளில் சிக்கி காயமடைந்தோ, அல்லது பிற உயிரினங்களால் தாக்கப்பட்டோ இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, உயிரிழந்த ஆமை கால்நடை மருத்துவர்கள் மூலம் உடல்கூராய்வு செய்யப்பட்டு, பின்னர் கடற்கரையில் புதைக்கப்பட்டது.


மக்கள் கருத்து

மனிதன்Mar 24, 2025 - 09:01:23 AM | Posted IP 162.1*****

கடல் நீர் போக போக சாக்கடையாக மாறி வருகிறது , நல்ல மீன்கள் எல்லாம் கிடைக்கவில்லை, எல்லாம் சாக்கடை யில் வாழும் அசிங்கமான மீன்கள் தான் அதிகமாக கிடைக்கிறது. எனவே கடற்கரைகளை சுற்றி அலையாத்தித் தாவரங்கள் மரங்களை நடவ வேண்டும்

Kvp girlMar 23, 2025 - 10:11:26 AM | Posted IP 172.7*****

ஏன் கடல் நீரில் கழிவுகள் கொட்டி ஆமை இறந்திருக்க கூடாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory