» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது
திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)
திசையன்விளை தங்கையின் கணவரை தாக்கியதாக அவரது மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியைசேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வெள்ளப்பாண்டி(40) தொழிலாளி. இவருக்கும் சாத்தான்குளம் அருகே புத்தன் தருவை சேர்ந்த சங்கரன் மகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது. இதனிடையே வெள்ளப்பாண்டி மற்றும் மாமனார் சங்கரன் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்சங்கரன், பேச்சுவார்த்தை நடத்த வீட்டுக்கு வருமாறு வெள்ளப்பாண்டியிடம் போனில் கூறியுள்ளார். இதையடுத்து வெள்ளப்பாண்டி, கடந்த 21ம் தேதி தனது மாமனார்ச ங்கரன் வீட்டுக்குசென்றார். அப்போது வெள்ளப்பாண்டி மனைவியின் சகோதரர் முத்துசாமி (40) என்பவர் வெள்ளப்பாண்டியை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளப்பாண்டி, தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர்ர் அனிதா வழக்குபதிந்து வெள்ளப்பாண்டியை தாக்கிய முத்துசாமியை கைதுசெய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
