» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது
திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)
திசையன்விளை தங்கையின் கணவரை தாக்கியதாக அவரது மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியைசேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வெள்ளப்பாண்டி(40) தொழிலாளி. இவருக்கும் சாத்தான்குளம் அருகே புத்தன் தருவை சேர்ந்த சங்கரன் மகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது. இதனிடையே வெள்ளப்பாண்டி மற்றும் மாமனார் சங்கரன் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்சங்கரன், பேச்சுவார்த்தை நடத்த வீட்டுக்கு வருமாறு வெள்ளப்பாண்டியிடம் போனில் கூறியுள்ளார். இதையடுத்து வெள்ளப்பாண்டி, கடந்த 21ம் தேதி தனது மாமனார்ச ங்கரன் வீட்டுக்குசென்றார். அப்போது வெள்ளப்பாண்டி மனைவியின் சகோதரர் முத்துசாமி (40) என்பவர் வெள்ளப்பாண்டியை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளப்பாண்டி, தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர்ர் அனிதா வழக்குபதிந்து வெள்ளப்பாண்டியை தாக்கிய முத்துசாமியை கைதுசெய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

