» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டம் : பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடங்கியது
புதன் 23, ஏப்ரல் 2025 4:39:07 PM (IST)

நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள்திருத்தும் பணி முடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் வி.எம்.சத்திரத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நான்குனேரி ஜோசப் பள்ளி ஆகிய மையங்களில் திருத்தப்படுகின்றன.
விடைத்தாள் திருத்தும் பணியில் சுமாா் 2 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். கடந்த நான்காம் தேதி தொடங்கிய இந்த பணி 20 நாள்கள் நடைபெறும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், மாநகரப் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டுபடி என சொல்லப்படும் நாளொன்று கொடுக்கப்படும் ரூ.200 கொடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)
