» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)
நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் வருகிற மே 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு தினசரி நான்கு முறை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. 12 பெட்டிகளை மட்டும் கொண்டு இயக்கப்படும் இந்த ரயிலில் ஆயிரக்கணக் கானோர் பயணம் செய்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு சென்று திரும்புவோர் இதனால் கடும் அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று இந்த ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மதுரையில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் அவர் இது குறித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து இந்த ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே முதன்மை மேலாளர் (இயக்கம் ) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனமழையில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் சேதம்: தற்காலிகமாக சீரமைப்பு!
புதன் 26, நவம்பர் 2025 5:02:55 PM (IST)

பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி: தமிழக அரசு உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:40:16 PM (IST)

எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி ஒப்புதல் சீட்டு பெற வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 26, நவம்பர் 2025 4:33:50 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 7:48:43 PM (IST)

விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:55:30 PM (IST)

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:43:37 PM (IST)




