» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு
ஞாயிறு 18, மே 2025 9:04:32 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். பாவூர்சத்திரத்தை சேர்ந்த இவர் கடந்த 2023ம் ஆண்டு தனது குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பரின் 15 வயது மகளுக்கு நீலகண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று துப்பாக்கியை வைத்து சிறுமியை மிரட்டியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்தும் போலீசார் நீலகண்டன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகியும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான நீலகண்டன் மீது ஆலங்குளம் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் நாட்டில் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவர்களை மீட்க கோரி சபாநாயகரிடம் மனு!
சனி 21, ஜூன் 2025 8:04:28 PM (IST)

நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 8 பைக்குகள் மீட்பு
சனி 21, ஜூன் 2025 12:41:09 PM (IST)

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)
