» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் : சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 27, மே 2025 10:37:36 AM (IST)
தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இலஞ்சி ரோட்டில் இருந்து ஆசாத் நகர் வரை திட்டமிடப்பட்ட இந்த புறவழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்போதே நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. தற்போது, சாலைவிரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தாலும், திட்டம் நிறைவுபெறாமல் தொய்வுநிலையில் இருப்பதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
குற்றாலம் சீசன் காலங்களில், தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானோரும் குற்றால அருவியில் நீராடி செல்கிறார்கள். பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி கோவிலுக்கும் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். அருகில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு வர்த்தக பணிகளுக்காக தினமும் தென்காசிக்கு வந்து செல்கின்றனர். பொதுமக்கள் வருகை, போக்குவரத்து அதிகரித்த நிலையில் உரிய சாலை வசதி இல்லாமல் இருப்பது சுற்றுலாத்துறைக்கு பின்னடைவை தரும்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த சுற்றுலா நகரத்தில் இதுபோன்ற முக்கிய திட்டப்பணிகள் தொய்வுநிலையில் நடைபெறுவது வேதனைக்குரியது. எனவே, தமிழக அரசு தென்காசி புறவழிச்சாலை திட்டத்திற்கு முக்கியத்துவம், முன்னுரிமை அளித்து சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து நிறைவுசெய்து, புறவழிச்சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் நாட்டில் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவர்களை மீட்க கோரி சபாநாயகரிடம் மனு!
சனி 21, ஜூன் 2025 8:04:28 PM (IST)

நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 8 பைக்குகள் மீட்பு
சனி 21, ஜூன் 2025 12:41:09 PM (IST)

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)
