» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)
பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் வினோத்குமார் (30). கூலி தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மதுசுதன் (5), மகேஷ் (2 மாதம்) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதன்பிறகு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த வினோத்குமார் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வினோத்குமாரை தென்காசி அனைத்து மகளிர் போலீசார் மீண்டும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக வினோத்குமாரை போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த தந்தை மாடசாமியிடம் வினோத்குமார் பேசினார். அப்போது அவர், ‘‘தொலைபேசியில் பேசுவதற்கு பணம் இல்லை, ஆயிரம் ரூபாயை அனுப்பி வையுங்கள்’’ என கூறியுள்ளார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வினோத்குமாரை மீண்டும் சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் வினோத்குமார் நேற்று திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அவரை சிறை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வினோத்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டு ஏன்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை : நெல்லையில் சோகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:27:46 PM (IST)
