» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு!
சனி 22, நவம்பர் 2025 10:08:40 AM (IST)

இருதயகுளம், அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியை அருள் சகோதரி சூ. அருள்மேரி தலைமை வகித்தார். பள்ளி மாணவிகள் 1600 பேர் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் விதைப் பந்துகள் தயாரித்து சாதனை படைத்தனர். வெங்கடாம்பட்டி சமூக ஆர்வலர் திருமாறன் கலந்து கொண்டு விதைப்பந்துகள் தயாரிப்பதன் அவசியம் குறித்து விளக்கிப்பேசினார்.
ஆசிரிய அருள் சகோதரிகள் ஜோசப் செல்வி, ஜான்சி, பிரசீலா, கிளாரா மேரி, மரிய மல்லிகா, ஜான்சி, ரீட்டா புஷ்பம், மற்றும் அருள் ராஜ துரைச்சி ஆகியோர் மாணவிகளுக்கு விதைப்பந்துகளை செய்து காட்டினர். விதைப்பந்து தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை அருள் சகோதரி சூ. அருள் மேரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரிய இனிகோ மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், ட்யூப் எரிக்க கூடாது: ஆட்சியர் சுகுமார் வேண்டுகோள்
சனி 10, ஜனவரி 2026 5:20:20 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)

