» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு!
சனி 22, நவம்பர் 2025 10:08:40 AM (IST)

இருதயகுளம், அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியை அருள் சகோதரி சூ. அருள்மேரி தலைமை வகித்தார். பள்ளி மாணவிகள் 1600 பேர் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் விதைப் பந்துகள் தயாரித்து சாதனை படைத்தனர். வெங்கடாம்பட்டி சமூக ஆர்வலர் திருமாறன் கலந்து கொண்டு விதைப்பந்துகள் தயாரிப்பதன் அவசியம் குறித்து விளக்கிப்பேசினார்.
ஆசிரிய அருள் சகோதரிகள் ஜோசப் செல்வி, ஜான்சி, பிரசீலா, கிளாரா மேரி, மரிய மல்லிகா, ஜான்சி, ரீட்டா புஷ்பம், மற்றும் அருள் ராஜ துரைச்சி ஆகியோர் மாணவிகளுக்கு விதைப்பந்துகளை செய்து காட்டினர். விதைப்பந்து தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை அருள் சகோதரி சூ. அருள் மேரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரிய இனிகோ மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பற்களை பிடுங்கியதாக வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
சனி 22, நவம்பர் 2025 8:49:41 AM (IST)

இராதாபுரம் வட்டத்தில் ரூ.18.95 கோடியில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:41:13 PM (IST)

விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:00:56 PM (IST)

லஞ்ச வழக்கில் தீயணைப்புதுறை அதிகாரியை சிக்க வைக்க முயற்சி? போலீசார் விசாரணை
வெள்ளி 21, நவம்பர் 2025 11:35:35 AM (IST)

திருநெல்வேலியில் கூட்டுறவு வார விழா: ரூ.107.71 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கல்
வியாழன் 20, நவம்பர் 2025 5:54:26 PM (IST)

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 20, நவம்பர் 2025 4:52:06 PM (IST)




