» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா

சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)



தமிழக அரசின் விருத்து பெற்ற நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஜமாத்தை சார்ந்த பாய் நெசவாளர் 8 பெண்களுக்கு பாய் நெசவாளர் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஜமாத்தை சார்ந்த பாய் நெசவாளர் 8 பெண்களுக்கு தமிழக அரசால் விருதுகளும், காசோலையும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைத்து பெண்களுக்கும் வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா இன்று (19-11-2025 புதன் கிழமை) நடை பெற்றது.

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருது வழங்கும் விழா 17.11.2025 மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதுகள் வழங்கினார்.

பாய் நெசவாளர்களுக்கான விருது பெற்ற மதினா பாத்திமா பிர்தெளஸ், பௌசியாள் பேகம், சரிபாள் பீவி, சுகராள் ஆகியோருக்கு 2023-2024 மாவட்ட விருது, 10 ,000 (பத்தாயிரம்) ரூபாய் காசோலை,5 கிராம் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. பயன்பாடு சார்ந்த விருது 2023-2024 விருது,40,000 (நாற்பது ஆயிரம்) ரூபாய் காசோலை, 4 கிராம் தங்க பதக்கம்

மும்தாஜ் என்பவருக்கு 2024-2025 மாவட்ட விருது, 10,000 (பத்தாயிரம்) ரூபாய் காசோலை, 5 கிராம் வெள்ளி பதக்கம் மகமுதாள் பானு என்பவருக்கு 2024-2005 குழு உற்பத்தி விருது, 40,000 (நாற்பது ஆயிரம்) ரூபாய் காசோலை, 4 கிராம் தங்க பதக்கம் ஹாஜா மைதீன் பீவி, மதினா பாத்திமா பிர்தௌஸ், சுளைகாள் பானு ஆகிய பெண்களுக்கு தமிழக அரசால் விருதுகளும் காசோலைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

விருதுகள் பெற்ற அனைத்து பெண்களுக்கும் இன்று (19-11-2025 புதன்கிழமை) வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் H.முகம்மது கனி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட துணைத் தலைவர் வீரை P. நவாஸ் ஷரீப்,பாய் நெசவாளர் சங்கத்தின் கணக்காளர் பெருமாள், மற்றும் மணி SDPI இப்ராஹிம் , மற்றும் வீரவநல்லூர் பாய் நெசவாளர் சங்கத்தின் பாய் நெசவாளர்கள் பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory