» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)
அம்பாசமுத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (56), விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் (45) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, ராஜகோபாலின் மருமகளைக் கணேசன் அவதூறாகப் பேசியுள்ளார். இதனை ராஜகோபால் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளால் ராஜகோபாலைச் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற ராஜகோபாலின் மகன் கண்ணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்தக் கொலை குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், இதர குற்றங்களுக்காக 13 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் காளிமுத்து ஆஜரானார்.
இந்த வழக்கில் திறம்படப் புலனாய்வு செய்து, சாட்சிகளைச் சரியாக ஆஜர்படுத்திக் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த அம்பை டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகவேல், முன்னாள் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் ஏட்டு செல்வி ஆகியோரை மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் பாராட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

