» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)
மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) காலியாக உள்ள 9175 தொழில்நுட்பம் மற்றும் டிரேட்ஸ்மேன் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்குத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணி மற்றும் தகுதிகள்:
பணியிடங்கள்: 9175 (தொழில்நுட்பம் மற்றும் டிரேட்ஸ்மேன்).
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு: அரசு விதிமுறைகளின்படி, பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க வரும் மே 19, 2026 இறுதி நாளாகும். பொதுப்பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினர் மற்றும் அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் rect.crpf.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
கட்டணமில்லா பயிற்சிகள்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், இந்திய இராணுவம் மற்றும் சீருடைப் பணியிகளில் அதிக அளவில் சேருவதை ஊக்குவிக்க 'வெற்றிநடை' என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கட்டணமில்லா வகுப்பறைப் பயிற்சிகள் மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சி.ஆர்.பி.எப் காவலர் பணிக்குச் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இந்த இலவசப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி மையங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99525 94351 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)


