» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
சனி 6, ஜூன் 2026 10:30:58 AM (IST)

தென்மேற்குப் பருவமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று 3-வது நாளாக அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், அருவியைக் தூரத்திலிருந்து பார்ப்பதற்குப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, தமிழகத்தின் மிக முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் விழும் இந்த அருவியில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் உற்சாகமாகக் குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை நேற்று முன் தினம் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, அம்பாசமுத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர்மழையால் மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து வழக்கத்தை விடப் பலமடங்கு அதிகரித்து, அருவியில் ஆபத்தான முறையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்காணித்த வனத்துறையினர், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடந்த இரண்டு நாட்களாகக் குளிப்பதற்குத் தடை விதித்திருந்தனர். அருவியில் வெள்ளத்தின் வேகம் குறையாததால், இன்று 3-வது நாளாகவும் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஏமாற்றத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கருத்தில் கொண்டு, அருவியின் அழகைக் குறிப்பிட்ட தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மட்டும் வனத்துறையினர் தளர்வு அளித்து அனுமதித்துள்ளனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியின் வெள்ளப் பெருக்கைக் கரையில் நின்றபடி பார்த்துச் செல்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)


