» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) மறுத்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழ்நிலையில், 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற இணைய ஊடுருவலாளர் (Hacker) குழு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விநியோகிப்பாளர் விபரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இந்தத் தரவுக் கசிவுப் புகாரைத் தேசிய அணுசக்தி ஆணையம் மற்றும் NPCIL நிர்வாகம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், அணுமின் நிலையத்தின் கணினித் தரவுக் கசிவுப் புகாருக்கும், அணுசக்தி பாதுகாப்பு உள்கட்டமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்புத் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும், அணு பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தரவுகள் எதுவும் வெளியேறவில்லை என்றும், முக்கியத் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)


