» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கங்கைகொண்டான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கங்கைகொண்டான் பகுதியில் உள்ள இலங்கைவாழ் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று நேரிடை ஆய்வு மேற்கொண்டார்.
இப்பகுதியில் வசிக்கும் 657 இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளின் கட்டுமானத் தரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அங்குள்ள மக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். தொடர்ந்து, முகாம் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற அவர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், கல்வி கற்பிக்கும் முறைகள் மற்றும் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம், எடைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் குழந்தைகளுடனும் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் துறையூர் பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவர் விடுதியின் செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை விபரங்கள் மற்றும் கல்வித் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் விடுதியின் அடிப்படைத் தூய்மை வசதிகள் குறித்தும் அவர் விரிவாகப் பார்வையிட்டார்.
நிறைவாக, கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், உள்நோயாளி படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகளின் கையிருப்பு நிலவரம் மற்றும் தினசரிப் பராமரிப்புப் பதிவேடுகள் ஆகியவற்றைத் தணிக்கை செய்தார். மேலும், சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனைச் சேவைகள் முறையாகக் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது திருநெல்வேலி வட்டாட்சியர் மாரிமுத்துகுமார், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)


