» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகை-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை: முன்பதிவு தொடங்கியது!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 11:37:53 AM (IST)

நாகையில் இருந்து இலங்கைக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால் வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் சில நாட்களில் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இது இரு நாட்டு பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் கடந்த 6-ஆம் தேதி நாகை துறைமுகம் வந்தது. இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 16-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதில் பயணம் செய்ய விரும்புபவர்கள் www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதந்தோறும் 2,000 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:39:47 AM (IST)

மக்கள் தீர்ப்பை திமுகவிற்கு மதிக்கத் தெரியவில்லை : நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:24:28 AM (IST)

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)


