» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)
கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதேவேளை, கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பேச்சுப்பாறை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பேச்சுப்பாறையில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால், திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 7 நாட்களாக அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில், அருவிக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளதால் திற்பரப்பு அருவில் குளிக்க 8வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேவேளை, பேச்சுப்பாறை அணையில் நீர் வெளியேற்றம் நாளை நிறுத்தப்பட்ட வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் நாளை முதல் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் : பள்ளி செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:44:27 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST)

பனைமரம் நமது மாநிலத்திற்கு உரிய சிறப்புமிக்க மரம் : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:06:56 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:06:57 PM (IST)

பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:50:13 PM (IST)




